திருக்குறள் மறு மொழிபெயர்ப்பு எனும் ஆளுநரின் கருத்து தேவையற்றது: மாஜி அமைச்சர் உதயகுமார் கருத்து

மதுரை: திருக்குறளை மறு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தேவையற்றது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்மூலம் பல குடும்பங்கள் பாதுகாக்கப்படும். ஆன்லைன் தடை சட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசை வரவேற்கிறேன். வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  துரிதப்படுத்த வேண்டும்.  போதைப்பொருள் தடுப்பு, ரவுடிகள் தடுப்பு என டிஜிபி  பல திட்டங்களை செயல்படுத்துகிறார்.

இதனையும் தீவிரப்படுத்த வேண்டும். திருக்குறளை மறு மொழிபெயர்ப்பு செய்யவேண்டும் என தமிழக ஆளுநர் கூறியது தேவையற்றது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவை. இதுதொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கு பதில் சொல்லவோ, எதிர்வாதம் செய்யவோ தேவையில்லை. சைவம், வைணவம், பௌத்தம் இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும் அன்பை  மட்டுமே போதிக்கின்றன’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.