மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம்

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மாதத்திற்கு 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மத ஸ்தலங்கள் பொது நோக்கத்தின் கீழ் வகைப்படுத்தப்படும்.

2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணம் அலகொன்றுக்கு ரூ.32/- ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைவாக , 180 அலக்குளுக்கு மேலாக மின்சாரத்தை பயன்படுத்தும் மத ஸ்தலங்களுக்கு அலகொன்றுக்கு 65/- விதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.