
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் படுகாயம்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை கோவையில் உள்ள எஸ்என்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த நிகழ்ச்சியை காண முதலில் வரும் 1000 பேருக்கு இலவச அனுமதி என்று பதிவிட்டிருந்தார் யுவன். இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு கூடியிருக்கிறார்கள். அதோடு ஆளாளுக்கு முந்திக்கொண்டு ஓடியதால் அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண் போலீஸ் உள்பட 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.