வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.7.38 கோடி மோசடி… 2 பெண்கள் உள்பட 4பேர் கைது

கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாகவும், எஸ்பிஐ வங்கி மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும் 7 கோடியே 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட4பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த நடேஸ்வரி, தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு இருப்பதாக 39 நபர்களிடம் 3கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.