
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் அதே பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் அந்த பகுதியில் வழக்கமாக செல்லும் டீ கடைக்கு டீ குடிக்க சென்றார்.
டீ குடித்தவர் கடையில் இருந்து வெளியே வந்தபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. அவருக்கு திடீரென கால் வழுக்கியதில் அருகில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து அலறி துடித்தார்.

இதைத் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் மரணம் வரும் என்பது போல் உள்ளது இந்த சம்பவம். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in