ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக் கொலை – பழிக்குப் பழி நடந்த கொலையில் 8பேர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜாமீனில் வெளி வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்திவாடியைச் சேர்ந்த முரளி என்பவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் நேற்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முரளி கைதாகி ஜாமீனில் வெளிவந்து இருப்பது தெரிய வந்தது.மேலும் உதயகுமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.