தன் மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன் மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக கூறி தீக்குளித்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.