சட்டபேரவை கட்டிடத்தில் பேய்?; 4 ஆண்டில் 6 எம்.எல்.ஏக்கள் சாவு!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இதற்கு முன்பு சுடுகாடாக இருந்ததாகவும், அந்த இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்பட்ட சட்டப்பேரவை கட்டடத்தில் பேய் உலவுவதாகவும் மூட நம்பிக்கை நிலவி வருகிறது.

கடந்த 2002ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கிஷண் மோத்வானி என்பவரது மரணம் தான் இந்த மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போடும் விதமாக அமைந்தது.

இந்த மரணத்துக்கு பின்னர் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையான 200 என்ற எண்ணிக்கையுடன் செயல்படவே இல்லை என கூறப்படுவது தான் அந்த மாநில மக்களிடையே இருந்து வந்த சந்தேகத்துக்கு வலுசேர்த்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மரணமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் மாஸ்டர் பன்வர்லால் மேக்வால், கைலாஷ் திரிவேதி, கஜேந்திர சிங் ஷெகாவத், பன்வர்லால் ஷர்மா, கிரண் மகேஷ்வரி மற்றும் கௌதம்லால் மீனா ஆகியோர் இடம் பிடித்து இருப்பது தான் சக எம்எல்ஏக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கட்டிடத்தில் பேய் சுற்றுவதாக மூட நம்பிக்கை பரவியபடி உள்ளதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுவதும் பிறகு அதை பற்றி எவ்வித தகவலும் இல்லாமல் போவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் 7 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் ஷர்மா திடீரென மரணம் அடைந்தது மீண்டும் ‘பேய் சப்ஜெக்டை’ கிளப்பி விட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்டிடத்தில் பேய் என்பன போன்ற மூட நம்பிக்கை பேச்சும், அதையொட்டிய அச்சமும் பரவி வருவதால் மக்கள் மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளும் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றனர்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில பொதுமக்கள் கூறுகையில், ‘மக்களிடையே மூட நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு வசுந்தரா ராஜு அரசு ஆட்சியில் இருந்தபோது கல்யாண் சிங் எம்எல்ஏ திடீரென மரணமடைந்தார்.

கழற்றிவிட்டு ஓடிய அட்மின்; சிக்கலில் மாட்டிய எச்.ராஜா!

அப்போதும் பேய்..பிசாசு..அபச குணம், ஆபத்தான கட்டிடம், சுடுகாடு இருந்த இடம் என்பன உள்ளிட்ட பல்வேறு பேச்சுகள் எழுந்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் யாகம் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் தற்போது பன்வர்லால் ஷர்மா நீண்ட நாட்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றும் இறந்து உள்ளார். ஆனாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இதனுடன் சட்டப்பேரவை கட்டிடத்தில் பேய் என்ற மூட நம்பிக்கையையும் இணைத்து வதந்தியை பரப்புகின்றனர்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.