ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்…!

சென்னை: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு உரிய பணப்பலன் கொடுக்கப்படாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார்.

தமிழக நிதிநிலைமை மோசமாக இருப்பதால், ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய பணப்பலன்களை கொடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஒய்வுபெறுபவர்கள் கடும் அவதிப்படுகின்றன. அவசர தேவைக்குக்கூட பணம் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு ஓய்வூதிய பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. வழக்கின் நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து, மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கின் இன்றைய விசாரணைக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்  உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதிகள் ஓய்வூதிய பலன் குறித்து விளக்கம் கேட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.