காட்டுப்பகுதியில் வைத்து திருநங்கைகளின் முடியை வெட்டி தாக்குதல் நடத்திய இருவர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கழுகுமலையைச் சேர்ந்த திருநங்கைகளான அனன்யா மற்றும் மகேஷ் என்பவர்கள் கோவில்பட்டிக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த நோவா யுவான் ,மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் ஆகியோர் கெச்சிலா புரம் காட்டுப்பகுதிக்கு அவர்களை கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்குவைத்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் முடியை அறுத்த வீடியோ வெளியான நிலையில், இருவர் மீதும் வழக்குப் பதிந்த போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.