ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கீழபுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த செஞ்சய்யா என்பவருக்கு 7 வயதில் மகன் இருந்தார். சம்பவத்தன்று சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவனை பாம்பு கடித்துள்ளது.
சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த தந்தை பதற்றத்துடன் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மனம் நொந்துபோன தந்தை உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஏதேனும் ஆட்டோ கிடைக்கிறதா என்று பார்க்கையில் அதுவும் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த தந்தை, தனது மகனின் சடலத்தை தோளில் சுமந்தும், பின்னர் இருசக்கர வாகனத்தில் எடுத்தும் சென்றுள்ளார். இது தொடர்பான காட்சி வெளியாகி பார்ப்போர் மனதை கலங்க செய்துள்ளது.
பாம்பு கடித்து இறந்து போன சிறுவனின் உடலை தந்தையே சுமந்து சென்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
newstm.in