ஈரோடு || 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமியிடம் தனசேகர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு தனசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.