சாலையின் மறுபக்கம் செல்ல முயன்ற நபர் தவறி விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் சென்டர் மீடியனில் ஏறி, சாலையின் மறுபுறம் செல்ல முயன்ற நபர், கால் இடறி தவறி விழுந்ததில், லாரியின் சக்கரத்தின் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பனியன் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த காங்கேயத்தைச் சேர்ந்த மகாதேவன், நேற்று மதியம் தனது நண்பருடன், சாலை விதிகளை மீறி, சென்டர் மீடியனில் ஏறி சாலையின் மறுபக்கம் செல்ல முயன்றார்.

அப்போது கால் இடறி கீழே விழுந்த மகாதேவன் மீது அவ்வழியாக வந்த லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில், அவர் தலைநசுங்கி உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.