தமிழ் பாடம் கட்டாயம்; உயர்க்கல்வி துறை அதிரடி!

தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டு இருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக் கழகங்களில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு 2ம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம் பெற வேண்டும்.

ஏற்கனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு உள்ளது. 2வது ஆண்டில் தமிழ் பாடத்தேர்வு இல்லை. தற்போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம் பெற வேண்டும்.

மேலும் இந்த நடைமுறை இந்த கல்வி ஆண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ? அப்போது முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர வேண்டும். இவ்வாறு தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.