சீனாவின் கோவிட்-19 பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.
சீனத் தூதுவர் மற்றும் மகிந்த ராஜபக்சவிற்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
ராஜபக்சவின் வாழ்த்து கடிதம்
கலந்துரையாடலின் போது, சீனாவின் சோசலிச கட்டுமானத்தில் புதிய மைல்கல்லாக இருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் வாழ்த்து கடிதத்தை ராஜபக்ச வழங்கியுள்ளார்.
ராஜபக்சவின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த தூதுவர், இலங்கையும் சீனாவும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் தூதுவர் குய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனாவின் உதவும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மகிந்தவின் கேள்வி
இலங்கையர்கள் சீனாவுக்குச் செல்வது மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்வது குறித்தும் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தூதர் குய், இலங்கை வணிகர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதற்கு ஏற்கனவே விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், சீன சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தீவுக்கு வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.