
மரத்தை ஏன் வெட்டுகிறார்கள், அது பாவம் இல்லையா? என ஒரு சிறுமி மழலை மொழியில் கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சீர்காழி மாரிமுத்து நகரில் வசிக்கும் ஜெகநாதன் என்பவரது வீட்டில் பராமரிப்பு பணிக்காக மரத்தை வெட்டியுள்ளனர்.
ஜன்னல் வழியாக இதனை பார்த்த ஜெகநாதனின் இரண்டரை வயது மகள் மயூரி, மரத்தை ஏன் வெட்டுகிறார்கள் அது பாவம் இல்லையா? என இரக்கத்துடன் கேட்டதை, அவரது தந்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.