மாணவியை கொலை செய்த இளைஞனுக்கு இந்த தண்டனைதான் சரி… விஜயகாந்த ஆவேசம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து

தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

2016 இல் சுவாதி, 2021 இல் சுவேதா, தற்போது சத்யபிரியா என ஒருதலை காதலால் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.

தான் ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க பெற செய்ய வேண்டும். காதல் விஷயத்தில் பெண் பிள்ளைகளும் இனி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று

வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.