ஆற்றில் படகு கவிழ்ந்து 10 மாணவர்கள் பலி| Dinamalar

கோ சம்ரோயன்:கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், ௧௦ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், புனோம் பென் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மெகாங் ஆற்றை, ஒரு படகு இருதினங்களுக்கு முன் இரவு கடந்தது. இந்த படகில், ௧௨ – ௧௪ வயது வரையிலான மாணவர்களும் பயணித்தனர். இவர்கள் வகுப்பை முடித்துவிட்டு தங்களது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றதால், படகு பாரம் தாளாமல் கவிழ்ந்தது. அந்த படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இதனால், ௧௦ மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு மாணவர்கள், இரண்டு படகு ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.