புதுச்சேரியில், அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயா்த்தப்பட்டதையடுத்து, புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயா்வு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவித்து கடந்த 8-ம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 34 சதவீதமாக உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமானது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நிதித் துறை சாா்புச் செயலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்தாா்.
இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான உத்தரவு அரசு, அரசு சார்புத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி நிர்வாகத் தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயா்வு குறித்த விவரம் அனுப்பி வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.