தமிழக அரசு கொடுத்த ஏமாற்றம்: தீபாவளி போனஸ் இவ்வளவு தானா?

பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள 10 % சதவிகிதம் தீபாவளி போனஸ் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணை தொகை என மொத்தம் 10% போனஸ் (கருணைத் தொகை உள்பட) வழங்குவதற்கு உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது போதுமானதாக இல்லை என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 % சதவிகித போனஸ் போதுமானதல்ல . இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

கடந்த கொரோனா காலங்களில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கூட 10 % சதவிகித போனஸ் வழங்கப்பட்டது . ஆனால் தற்பொழது நாடு பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழுந்து , சகஜ நிலைக்கு திருப்பியுள்ளது . வழங்கம் போல் அனைத்து பேருந்துகளும் இயங்குகிறது . அனைத்து தொழில் நிறுவனங்களும் சீராக இயங்குகின்றது.

இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னர் வழங்கியது போல் தற்பொழுதும் 20 % சதவிகிதம் போனஸ் தொகை கிடைக்கும், இந்த வருடம் பண்டிகையை மனநிறைவோடு கொண்டாடலாம் எதிர்ப்பார்த்து ஆவலோடு காத்திருந்த தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும், பொதுத்துறை ஊழியர்களின் எண்ணங்களையும் , எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு போனஸ் அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து வழக்கம் போல் 20 % சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.