பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி படுகொலை!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான்(Balochistan) மாகாண நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முகமது நூர் மெஸ்கன்சாய்(Muhammad Noor eskenazi) மீது நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

பள்ளிவாசலுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த முகமது நூர் மெஸ்கன்சாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நீதிமன்ற வரலாற்றில் மிகவும் தைரியமான நீதிபதி என்ற பெருமைக்குரிய முகமது நூர் மெஸ்கன்சாய்க்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஷரியாவுக்கு எதிராக ரிஃபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை வழங்கியவர் இவர் தான்.

நிதி அமைச்சர் பதவி பறிப்பு – பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி!

பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ முன்னாள் நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான நடவடிக்கை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாத சம்பவங்கள் செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக Pakistan Institute for Conflict and Security Studies(PICSS) தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.