மத்திய அரசின் அடுத்த அதிரடி; புயலை கிளப்பும் நிதின் கட்கரி!

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12வது சர்வதேச மாநாடு இன்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12வது சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

நாட்டில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

திமுகவுக்கு தாவும் கே.பி.முனுசாமி?; தமிழக அரசியலில்.. திடீர் பரபரப்பு!

இதன் பின்னர் இந்த நெடுஞ்சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றம் செய்யப்படும். இதனை தொடர்ந்து இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக்கட்டணம் வசூல் செய்யும்.

இந்த திட்டத்தால் 13 ஆண்டுகளுக்கு பிறகும் செலவுகள் உள்பட முழுமையான முதலீடு முழுமையாக திரும்ப கிடைத்துவிடும். இதேப்போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையிலான சாலைப் பணிகள் முடிவு பெற்று விடும்.

எடப்பாடி பழனிச்சாமி ஷாக்; எகிறி பாயும் முக்கிய தளபதி!

மேலும் டெல்லியில் இருந்து ஜெய்பூர் இடையே 2 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும் பயணம் செய்யும் விதமாக பசுமை விரைவு நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகின்றன.

அதேப்போல் டெல்லி-ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும், டெல்லி-மும்பை இடையே 10 மணி நேரத்திலும் பயணம் செய்யும் விதமாக பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.