ஆன்மிகம் தான் அடிப்படை காவியின் பலம் கறுப்பினால் அழிந்துவிடக் கூடாது – தமிழிசை கருத்து

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமம்(Ashram) சார்பில் இந்து தர்ம வித்யா பீடம்(Hindu Dharma Vidya Peedam) 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில், தெலங்கானா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன்(dr tamilisai soundararajan) கலந்துக் கொண்டு 15-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளுக்கு வித்யாஜோதி பட்டங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: “கன்னியாகுமரிக்கு வரும்போது தாய் வீட்டிற்கு வந்த குழந்தையை போல மனம் அலைபாய்கிறது. நான் ஆளுநராக இருந்தாலும் தான் தமிழகத்தின் மகள். தமிழகத்தில் பண்பாட்டை மீட்டெடுப்பதில் என்றும் எனது பங்கு இருக்கும்.

தமிழகத்தில் ஆன்மிகம் குறித்து பேச துவங்கிவிட்டால் ஏதோ பேசக்கூடாததை பேசிவிட்டது போல் ஒரு மாய தோற்றம் ஏற்படுகிறது. ஆன்மிகம் தான் அடிப்படை காவியின் பலம் கருப்பினால் அழிந்துவிடக்கூடாது தர்மம் என்ற தேர் எரியாமல் இருக்க வேண்டும் என்றால் பல கண்ணன்கள் உருவாக வேண்டும்.

ஆன்மிகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை. தமிழை வேறு யாரெல்லாமோ வளர்த்தார்கள் என்று கூறுவது தவறு. ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழை வளர்தார்கள். உயிரையும் உடலையும் போல் தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.