ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அந்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளில் பலத்த மழையால் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  2-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.