இந்தியாவில் மேலும் 2,060 பேருக்கு கோவிட் பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,060 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,060 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,30,888 ஆனது.

* கடந்த 24 மணி நேரத்தில், 1,841 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,40,75,149 ஆனது. தற்போது 26,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

* கோவிட் காரணமாக 6 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,905 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 219.33 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.