நடைபயணத்தை உடனே நிறுத்துங்க… ராகுலுக்கு காங்கிரஸ் எம்பி கோரிக்கை!

காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெற செய்யும் நோக்கத்துடனும், மத்திய பாஜக ஆட்சியை 2024 தேர்தலில் முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ரு பேரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவர் கர்நாடக மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையத்தில் ராகுல் காந்தி தமது வாக்கை செலுத்தினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தமது இந்திய ஒற்றுமை யாத்திரையை கைவிட வேண்டும் என்று அக்கட்சியின் எம்பி ஒருவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பியும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தினா பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் முழு கவனம் செலுத்தும் விதத்தில் ராகுல் தமது நடைபயணத்தை கைவிட வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ்த்துடன், “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வகையில், சசிதரூர் போட்டியில் இருந்து விலகி இருக்க வேண்டும்” எனவும் அவர கருத்து தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.