காஞ்சிபுரம்: தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருந்த 3 பேருந்துகள் தீயில் கருகி நாசம்

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களை ஏற்றிச் செல்ல 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளிலும் தீ பரவியது. இதையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 3 பள்ளி பேருந்துகளும் முற்றிலும் எரிந்து தீயில் கருகி நாசமனது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.