டெல்லி மேலிடம் ரெட் சிக்னல்; படபடத்துப்போன எடப்பாடி!

முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சராக இருந்த

ஆகிய இருவரும் பதவி போன பிறகு அதிமுக தலைமை பதவிக்கு குறிவைத்தனர்.

ஒற்றை தலைமையாக இருக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். ஆனால், வழக்கம் போல் கூட்டு தலைமையாக தான் இருக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அடம் பிடிப்பதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணியாகவும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் இயங்கி வருகின்றனர்.

இதையே சாதகமாக்கி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கும் வகையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதாக தெரிகிறது.

இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அளித்த தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததால் யாருடைய தலைமையில் அதிமுக இருக்கிறது? என்பது புரியாமல் தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், கடைசியில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே செல்லுபடியாகும் என, கூறப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சமீபத்தில் டெல்லி சென்று கூடுதலாக சில ஆவணங்களை வழங்கி உள்ளனர்.

ஆனால், அவற்றை வாங்க மறுத்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கடுமை காட்டி அனுப்பி உள்ளது. இதனை தங்களுக்கு பாதகமாக கருதிய எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு விரைந்து பாஜக தலைமையிடம் காய்நகர்த்தி பார்த்துள்ளார்.

ஆனால் பாஜக தலைமை,‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உங்களுக்குள் பிரிவினை இருக்க கூடாது. ஒன்று சேருங்கள். அப்போதுதான் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த சக்தியாக மாற முடியும்’ என அறிவுரை வழங்கி உள்ளது.

இதை கேட்டு டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இறுகிய முகத்துடன் தமிழ்நாட்டுக்கு திரும்பினர். ஆனால் வந்த சில நாட்களில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் அசாதாரணமாக மாறி உள்ளது.

அதாவது சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு, ஆர்.பி.உதயகுமாரை நியமித்த எடப்பாடியின் கோரிக்கையை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2 அறிக்கைகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரது தூக்கத்தை கலைக்கும் விதமாக அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரண வழக்கில் சசிகலாவை குற்றம் சாட்டி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டி நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

இது சசிகலா, எடப்பாடி பழனிசாமியை கடும் நெருக்கடியில் தள்ளி இருந்தாலும், தமிழக அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.

இதனால் அரண்டு போன எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் பாஜக டெல்லி தலைவர்களை தொடர்புகொண்டு முறையிட்டதாகவும், அதற்கு அவர்கள் ‘நாங்கதான் சொன்னோம் இல்லையா. ஒன்று சேருங்கள். பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

இனியும் ஒன்று சேராவிட்டால் வர போகும் பிரச்சனைகளில் இருந்து உங்களால் மீள முடியாது. அப்போது எங்களது உதவியை கேட்டு வரவும் கூடாது’ என்று, கடைசி எச்சரிக்கையை பாஜக விடுத்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பரபரப்புடன் பேசிக்கொள்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.