தீபாவளி ஸ்பெஷல்…தென்மாவட்ட பயணிகள் கோயம்பேடு போக வேண்டாம்… இங்கேயே பஸ் ஏறலாம்!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி ,திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி ,ஆகிய மாவட்ங்களுக்கு இந்த பேருநதுகள் இயக்கப்பட்டு வுருகின்றன.

இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பஸ்களில் ஏறி பயணிக்கலாம். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், படப்பை, கண்டிகை, திருப்போரூர், கிளாம்பாக்கம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் கோயம்பேடு சென்று பேருநதில் ஏற வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே அவர்கள் முன்பதிவு செய்துள்ள பேருந்துகளில் ஏற வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 250 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

பயணிகளுக்கு தேவையான சுகாதார மற்றும் கழிப்பிட வசதிகள் இங்கு சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பயணிகளின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.