பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருப்பதாக முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.