2 நாள் டாஸ்மாக் விடுமுறை; திடீர் உத்தரவு..குடிமகன்கள் ஷாக்!

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூலம் கடந்த ஆண்டு 11 சதவீதம் வருவாய் அதிகரித்து உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இது ஒருபுறம் அரசுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றாலும், தமிழக மக்கள் இதற்கு பெரிதும் வரவேற்பு தெரிவிப்பது இல்லை.

இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைக் காலங்களில் மது பாட்டில்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், டாஸ்மாக் நிர்வாகமோ இலக்கு நிர்ணயிப்பதை வழக்கமாக செய்து வருகிறது.

அதாவது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று, தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடும் பண்டிகை நாட்களை குறி வைத்து, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் 22ம் தேதி ரூ.200 கோடி மறுநாள் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் ரூ.200 கோடி என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டு இருக்கும் முக்கிய அறிவிப்பு தீபாவளியை மஜாவாக கொண்டாட இருந்த குடிமகன்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வருகிற 24ம் தேதி மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24ம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் இருக்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.