மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்த அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது
