முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு!

சென்னை: முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பாது, கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுனர்கள், தமிழக அரசின் மூத்த செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தயாரித்து தமிழகஅரசிடம் வழங்கும்.  இந்த குழு அவ்வபோது ஆலோசனைகள் மேற்கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டங்களை நிறைவேற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.