டெல்லி: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடலில் 24ம் தேதி புயல் சின்னமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.