முதன்முறையாக நகர, மாநகர சபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு!

கிராம சபையை போன்று தமிழகத்தில் முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளன.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு நாட்களின் போது, அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டப்படுகிறது.

இதில் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பொது மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை போன்று இனி தமிழகத்தில் முதன் முறையாக நகர

சபை மற்றும் மாநகர சபை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நகர பகுதிகளில் இருக்கக் கூடிய மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்த நகர, மாநகர சபை கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6 ஆவது வார்டில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி நடைபெறும்

மாநகர சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க

உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.