திருச்சியில் சூப்பர் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்த மெய்நிகர் நூலகம்!

மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை ( virtual reality library) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் – மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை ( virtual reality library) தமிழக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார் .

இதே போல் நூலகத்தில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த மூன்று நூலகர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இயக்குனர் இளம்பகவத், இணை இயக்குனர் பொது நூலகம் கூடுதல் பொறுப்பு அமுதவல்லி , லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பேசியிருந்தார். “இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 34லட்சம் குழந்தைகளுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் மையங்கள் தேவைப்பட்டன.

ஒரு மையத்தில் 20 குழந்தைகள் என்கிற விதத்தில் இதை நாங்கள் திட்டமிட்டோம் . இந்த திட்டம் செயல்படுத்தி ஒரு வருடம் ஆவதால் முன்னறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினேன். 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.

இல்லம் தேடி கல்வி திட்டம் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இன்னும் கொஞ்சம் காலம் இந்த திட்டம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது தான் உண்மை என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.