இலங்கை மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதிகள் சந்திப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர் அவர்களுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
07-11-2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.