‘காதல் சடுகுடு’ : ராஜஸ்தானில் மாணவி மீது காதலில் விழுந்த ஆசிரியை ஆணாக மாறி திருமணம்…

ராஜஸ்தானில் தனது மாணவி மீது காதலில் விழுந்த ஆசிரியை ஆணாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோதி கா நாக்லா அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆரிசிரியையாக பணிபுரிந்து வருபவர் மீரா குண்டல்.

அதே பள்ளியில் பயின்று வரும் கல்பனா என்ற மாணவிக்கு கபடி விளையாட பயிற்சி அளித்து வந்தார் மீரா.

போட்டிகளில் பங்கெடுப்பதற்காக கல்பனாவுடன் வெளியூர்களுக்கு அவ்வப்போது செல்லும் மீரா-வுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது.

இதனால், ஆணாக மாற நினைத்த மீரா அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு தன்னை ஆணாக மாற்றிக்கொண்டதோடு தனது பெயரையும் ஆரவ் என்று மாற்றிக்கொண்டார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டு தினங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள், இது தற்போது ராஜஸ்தான் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஆரவ் “காதல் வந்துவிட்டால் இதெல்லாம் சாதாரணம்” என்று சாதாரணமாக கூறுகிறார்.

இவரது மனைவியான கல்பனா “10 ம் வகுப்பு முதல் எனக்கு உடற்கல்வி ஆசிரியராக இருந்து வந்தார். எனக்கு அவர் மீது விருப்பம் இருந்தது. அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் இருந்தாலும் திருமணம் செய்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.