சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யகோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து அக்டோபர் 19ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
