'ப்ளீஸ் எங்ககிட்டயும் பழகுங்க..!' – அமெரிக்காவிடம் கெஞ்சும் இம்ரான் கான்

இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு கண்ணியமான உறவு இருப்பதை போல், பாகிஸ்தான் உடனும் அமெரிக்காவுக்கு கண்ணியமிக்க உறவு இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு அமெரிக்காவின் சதி இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், முன்னாள் பிரதம் இம்ரான் கான் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அமெரிக்கா உடன் இந்தியா மிக கண்ணியம் வாய்ந்த உறவை கொண்டுள்ளது. இது போன்ற அமெரிக்காவின் கண்ணியமிக்க உறவு பாகிஸ்தான் நாட்டுடனும் இருக்க வேண்டும் என அடிப்படையிலேயே நான் விரும்புகிறேன். உக்ரைன் உடனான போரின் போதும், ரஷ்ய எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், தனது மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா பதில் கூறுகிறது. அமெரிக்கா உடன் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானும் முடியாது என கூற கூடிய தருணங்கள் இருக்க வேண்டும்.

உலக மக்கள் தொகை: சீனாவை முந்தும் இந்தியா!

குறைவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் தனது விருப்பத்தினை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்பே ரஷ்யாவிடம் தெரிவித்து விட்டது. ரஷ்ய எண்ணெயை நாங்கள் வாங்குவது பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதனால், அமெரிக்கா அதனை தடுக்க முடியாது.

ஏனெனில், பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும், ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது. அதன்படி, எங்களது அமைச்சகமும் ரஷ்ய எண்ணெயை வாங்கும். அதற்கான முக்கிய நடவடிக்கைகளை வருகிற மாதங்களில் அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.