இனி இது அவசியமில்லை… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2020 தொடங்கி கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கொரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலையில் ஐரோப்பிய நாடுகளில், இரண்டாவது அலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கில் உயர்கள் பலியாகின.

பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியிலேயே கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப் பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு இதுநாள்வரை அமலில் இருந்தது.

இந்த நிலையில், விமான பயணத்தின்போது பயணிகள் இனி முககவசம் அணிய வேண்டியதில்லை என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

“கொரோனாவை கட்டுப்பாடு தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான பயணிகள் இனி முககவசம் அணிய வேண்டியதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சூழ்நிலையை பொறுத்து பயணிகள் முககவசம் அணிவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என விமான நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இனி முககவசம் (மாஸ்க்) அணியாத பயணிகளு்கு அபராதமோ, வழக்கோ பதிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.