வீராங்கனை பிரியா பெயரில் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி.! அண்ணாமலை அறிவிப்பு.!

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில பாஜக  தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

கல்லூரி மாணவியான கால்பந்தாட்ட விசாரங்கனை வியாசர்பாடி பிரியாவுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ததில் ஏற்பட்ட தவறு காரணமாக, அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு இலவச வீடு, ரூ.10 நிதி உதவி வழங்கியதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் முதலமைச்சர் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதையடுத்து,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்ச்ர் முருகன் ஆகியோர்  பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பிரியாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  இந்தியாவிலேயே  மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கும் தமிழகத்தில் இவ்வாறு நடைபெற கூடாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை தமிழக பாஜக நடத்த உள்ளது என்றவர், வீராங்கனை பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக முழுதாக ஏற்கும் என்றும் கூறினார்.

பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார். முதல் அமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை குடும்பத்துக்கு அரசு வீடு, ரூ.10லட்சம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.