இந்தியாவை ஐ.நா., நிரந்தர உறுப்பினராக்குங்க: சொல்லுது பிரான்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொது சபையில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களை அதிகரிப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் ஐ.நா.,விற்கான பிரான்சின் நிரந்தர துணை பிரதிநிதி நாதலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: பிரான்சின் நிலை தெளிவாக உள்ளது. அனைவருக்கும் தெரியும்.

இன்றைய உலகில், ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம், சபையை பலப்படுத்துவதுடன், திறமையானதாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு சபையில் நிரந்தரமாக இருக்க விரும்பும், வளர்ந்து வரும் நாடுகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

latest tamil news

ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கிறது. நிரந்தர உறுப்பினர்களில், வலிமையான ஆப்ரிக்க நாடுகளையும் சேர்க்க வேண்டும். எஞ்சியுள்ள இடங்களில், புவியியல் பிரதிநிதித்துவப்படி ஒதுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.