ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்பு| Dinamalar

மும்பை: மஹாராஷ்ராவில் 74வது நாள் ராகுல் யாத்திரையில் ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்றார்.

காங்., எம்,பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மஹாராஷ்ராவில் நடைபயணம் நடந்து வருகிறது.

நேற்று 73வது நாளாக அவரது நடைபயணம் மஹாராஷ்ராத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இரவில் ஜல்காவ் மாவட்டத்தை நடைபயணம் சென்றடைந்தது.

latest tamil news

இந்நிலையில், காங்., எம்பி ராகுல் மற்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் இன்று(நவ.,20) துவக்கினார்.

அப்போது, ஹிந்தி நடிகரும், திரைப்பட இயக்குனருமான அமோல் பலேகர் தனது மனைவியுடன் இணைந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். காங்., எம்.பி ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையில் மகாராஷ்டிராவில் உள்ள குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

latest tamil news

இதையடுத்து இன்றுடன் மஹாராஷ்ராவில் நிறைவு பெறும் அவரது நடைபயணம் இரவில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று, பின்னர் அங்கு பயணிக்க உள்ளது.

பிரியங்கா பங்கேற்பு ?:

மத்தியபிரதேசத்தில் நடைபெறும் நடைபயணத்தில் பிரியங்கா பங்கேற்க உள்ளார். இவர் வரும் நவம்பர் 23ம் தேதி முதல் 25 வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.