உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவி மூலம் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஃபிஃபா கால்பந்து உலககோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாகவும், ஜியோ சினிமா செயலி மூலமாகவும் காணலாம்.
இந்த நிலையில் கால்பந்து உலக்கோப்பை போட்டிகளை தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.— Mano Thangaraj (@Manothangaraj) November 24, 2022
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.