16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! தாயின் 2-வது கணவர் கைது.!

கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவரது கணவர் வாகன விபத்தில் உயிரிழந்ததால், ஏற்கனவே திருமணம் ஆன 47 வயது உடைய மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் 16 வயது மகளுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியை இதுகுறித்து மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.