அன்று டயானா., இன்று இளவரசி கேட்.. அதே பயத்தை உணரும் மன்னர் சார்லஸ்!


பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் மீது விழவேண்டிய கவனத்தை தனது மருமகள் கேட் மிடில்டன் திருடுகிறார் என்று கவலைப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் மனைவி இளவரசி டயானாவின் வெற்றியால் பிரபலமாக அச்சுறுத்தப்பட்ட மன்னர் சார்லஸ், வேல்ஸின் புதிய இளவரசி மீதும் இதே போன்ற உணர்வுகளைக் கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேலஸ் கான்ஃபிடன்ஷியலிடம் பேசிய டெய்லி மெயிலின் டைரி ஆசிரியர் ரிச்சர்ட் ஈடன், “சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்ட நாளை நினைவில் கொள்ளுங்கள். ஞாயிறு நாளிதழ்களில் கேட், வில்லியம், ஹரி மற்றும் மேகன் ஆகியோருடன் வின்ட்சரில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்ததால் அவர் முதல் பக்கங்களில் இடம்பெறவில்லை…” என்று கூறினார்.

இளவரசி டயானா

Diana Kate king Charles

இளவரசி டயானா இருந்தபோது, அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸை விட, அவர்தான் எல்லா தலைப்புச் செய்திகளிலும் இருந்தார். இதனால் சார்லஸ் ஒருவித வெறுப்புடன் இருந்தார்.

அதேபோல், இப்போது அவர் மன்னராக இருக்கிறார், ஆனாலும் முதல் பக்கங்களில் இளவரசி கேட் தான் இருக்கிறார் என்று அவர் கூறினார்.

இளவரசி கேட்

பக்கிங்ஹாம் அரண்மனையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கான அரசு விருந்து பற்றி பேசிய ஈடன், சார்லஸை விட கேட் கவனத்தை ஈர்த்ததை ஒப்புக்கொண்டார்.

இளவரசி கேட் தான் சிறந்த நகைகளுடன் ஈர்க்கக்கூடியவராக இருந்தார். மக்கள் இளவரசி கேட்டை பார்க்க விரும்புவார்கள்.

அன்று டயானா., இன்று இளவரசி கேட்.. அதே பயத்தை உணரும் மன்னர் சார்லஸ்! | Princess Kate Hits Front Pages Than King CharlesChris Jackson/Getty Images

சார்லஸ் அழகான மனிதர் என்றாலும், நாங்கள் செய்தித்தாள்களை விற்கும் தொழிலில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். எனவே, எங்கள் முதல் பக்கங்களில் மிகவும் கவர்ச்சிகரமான நபரை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.