குஜராத் பாலம் இடிந்து விழுந்ததை போல் இன்றும் ஒரு சம்பவம்; பலர் படுகாயம்.!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பல்ஹர்ஷா எனும் இடத்தில் உள்ள நடைமேம்பாலம் இன்று மாலை உடைந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட்ட தொங்கு நடை பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர். தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் 400 பேர் இருந்தனர். திடிரென பாலம் இடிந்ததால் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்தனர். இதில் 141 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலனோர் குழந்தைகள் என்பது தான் பெருஞ்சோகம். பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது. மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டதாக கூறப்பட்டது.

ராகுல் பாதயாத்திரையில் கீழே விழுந்த மூத்த தலைவர்; மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.!

குஜராத் சம்பவம் ஏற்படுத்திய மனகாயங்கள் ஆறுவதற்குள், தற்போது மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.