சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு காயம்

யானை, சினம் படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கியது. அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அச்சம் என்பது இல்லையே படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அருண் விஜய், சண்டை காட்சிகளில் நடிக்கும்போது எத்தனை முறை காயம் ஏற்பட்டாலும் அதைப்பொருட்படுத்துவதில்லை. சொந்தமாக டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடிப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.