ருஹுணு கல்லூரி மோதல்: 6 மாணவர்கள் விளக்கமறியலில்


ருஹுணு தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதி 

ருஹுணு கல்லூரி மோதல்: 6 மாணவர்கள் விளக்கமறியலில் | Ruhuna National College Education Student Conflict

சம்பவத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம் இரவு (26) சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்து நடத்தியதாகவும், பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீட வளாகத்திற்கு வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ருஹுனு கல்லூரியில் மோதல்! 12 மாணவர்கள் வைத்தியசாலையில் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.